ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபால் பணிபுரியும் பி.எஸ்.பி.பி பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா கோவிந்தராஜ் மற்றும் தாளாளர் சீலா ராஜேந்தர் ஆகியோர் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நேற்று வரவழைக்கப்பட்டு அவர்களிடையே சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இருவரையும் அடுத்த முறை விசாரணைக்கு அழைக்கும் போது காவல் நிலையத்திற்கு வருகை தந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் இன்று முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் சீலா ராஜேந்தர் உள்ளிட்ட இருவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது.இதையடுத்து அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கீதா கோவிந்தராஜன் 2வது முறையாக ஆஜரானார். புகார் கிடைத்ததும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.