தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நாடு முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் இனி மேல் மது விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் 4,000 ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கேன்டீன்களில் வீரர்கள் நலன் கருதி ஏராளமான மது மற்றும் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக, இங்கு விற்பனை செய்யப்படும் மதுவுக்கு ஏக கிராக்கி உண்டு.
இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், ராணுவ கேன்டீன்களுக்கு மது மற்றும் வெளிநாட்டு பொருட்கள் கொள்முதல் செய்ய வேண்டாம்,என்றும் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு ராணுவ வீரர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.