மத்திய அரசு இந்தியாவில் உள்ள அணைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னோட்டம் அந்தப்பெரும் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இந்திய அரசு ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில்
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னோட்டத்தை நடத்தியிருக்கிறது.இந்நிலையில், தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜனவரி 2ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னோட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பான முறையில் தயாராகியிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.