தமிழகம்

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது.மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர். அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார். 

ALSO READ  கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள்- விஜயகாந்த்... 

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “வேளாண் துறை அமைச்சர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு. அவரது குடும்பத்தினருக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

ALSO READ  மனைவி இறந்த துக்கத்தில் தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கணவர்:

“அமைச்சர் துரைக்கண்ணு மறைவு தஞ்சை மாவட்டத்திற்கும் அதிமுகவிற்கும் பேரிழப்பாகும்” என த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  

“அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்” என்று திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோடநாடு வழக்கு : கோடநாட்டில் நடந்தது என்ன?

naveen santhakumar

கொரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: முடிதிருத்த தொழிலாளியின் மகள் ஐநா-வின் நல்லெண்ணத் தூதராக நியமனம்..!!

naveen santhakumar

மத்திய,மாநில அரசுகளை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் :

Shobika