மகாராஷ்டிரா:
மஹாராஷ்டிராவின், அவுரங்கபாத் நகர பஸ்களில் பயணிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க, நடத்துனரின் சட்டையில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவுரங்காபாத் நகராட்சி, ‘ஸ்மார்ட் சிட்டி’ உதருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக அவுரங்காபாத் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு கழகம் சார்பில் நகரில் 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சமீபத்தில் பெண் நடத்துனர்களிடம் சில பயணியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.இதையடுத்து, பயணிகளின் நடத்தையை கண்காணிக்க, அவுரங்காபாத் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு கழகம் முடிவு செய்தது.இதற்காக நடத்துனரின் சட்டை பையில், கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, டிக்கெட் வினியோகம் மற்றும் பயணியரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
மேலும் பஸ்களில் ஆய்வு மேற்கொள்ள முன்னாள் ராணுவ வீரர்களை, கள ஆய்வாளர்களாக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள், பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.