தமிழகம்

2020ம் ஆண்டிலும் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்பதை உறுதி செய்வோம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020 ம் ஆண்டிலும் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்பதை உறுதி செய்வோம்,என்ற கருத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை இளஞ்சிவப்பு நிற வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தமிழக அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளாலும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல்துறை தொடர் முயற்சியாலும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது.

ALSO READ  மதுரை புத்தக தாத்தா காலமானார்

இந்த நிலையில், வரும் 2020 ஆம் ஆண்டிலும் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இருப்பதை உறுதி செய்வோம் என்பதை குறிக்கும் வகையில்,106 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை இளஞ்சிவப்பு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ரிப்பன் மாளிகையின் வண்ண விளக்கு அலங்காரத்தை ரசித்தபடி தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறுதிக்கட்ட வேளையில் சென்னையின் பறக்கும் பாலங்கள்!

News Editor

3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – காப்பகத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு..

Shanthi

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

naveen santhakumar