‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது. அதனை தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்த திரைப்படம் கடந்த ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வாங்கியது. சிறந்த நடிப்பிற்க்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும் ,சிறந்த இந்தி படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதினை வாங்கியது.
‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை ‘பொன்மகள் வந்தால்’ படத்தின் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இயக்கயுள்ளார். இதில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்டோர்கள் நடிக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அந்தாதூன்’ படத்தில் வரும் வயலின் இசை படம் வெளியான போது அனைவரின் பாராட்டுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் அழகை இசையில் கொண்டுவரும் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது.