தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ராஜா. இவர் இயக்கி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை கொடுத்த படம் “தனி ஒருவன்”. இந்த படத்தின் மூலம் தான் இயக்குனர் மோகன் ராஜா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார், அன்று வரை அவர் தமிழில் இயக்கிய அணைத்து படங்களும் வேறு மொழி திரைப்படத்தின் ரீமேக்காகவே இருந்தது.
ஆனால் தனி ஒருவன் படத்தினை இயக்கியதற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது இவரின் படத்தினை மற்ற மொழி இயக்குனர்கள் ரிமேக் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து தனிஒருவன் கொடுத்த உற்சாகத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்ற படத்தினை இயக்கி வெளியீட்டு இருந்தார் மோகன் ராஜா.
இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து மோகன் ராஜா “தனிஒருவன் 2” படத்தினை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. ஆனால் நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டிருப்பதால் இப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தினை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்பிறகு படத்தின் கதை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதில் இறுதி முடிவு எட்டப்படாததால், அப்படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விளக்கியுள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் மோகன் ராஜா அடுத்து யார் படத்தினை இயக்கவுள்ளார் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் பரவ தொடங்கியது. அதனை தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் , “எனது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசீர்வாதத்துடன், வாழ்க்கை எப்போதும் எனக்குச் சிறந்த மற்றும் பெரிய விஷயங்களையே பரிசளித்துள்ளது. இந்த நேரத்தில் மெகா ஸ்டருடன் இணைந்து ஒரு மெகா படத்தை இயக்க நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் இயக்குனர் மோகன் ராஜா தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து ஒரு புதிய படத்தினை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளார்.
இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “லூசிபர்” படத்தின் ரிமேக் என தகவல் வெளியாகியுள்ளது.