இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்கியராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக அவரது மகன் ஷாந்தனு வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”என் பெற்றோர் கே. பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.