இந்தியாவில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 8 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருக்கிறது.
இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறையத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறித்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர். இந்தக்கூட்டத்துக்குப் பிறகு, ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு போடப்படும். அதனையடுத்து, 50 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#corona #NEWCORONA #coronavaccine #indiafightcorona #coronavirus #tamilthisai