புதுடில்லி :
பாராளமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் மாதம் 29ல் துவங்கி, டிசம்பர் 23ல் முடிக்க திட்டமிடபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பாராளமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது, புதிய வேளாண் சட்டம், ‘பெகாசஸ்’ போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.எனவே கூட்டத் தொடரை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பாராளமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் மாதம் 29ல் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தனி மனித இடைவெளியை பின்பற்றி இரு சபைகளும் ஒரே நேரத்தில் கூடும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.பாராளமன்ற, வளாகத்திற்குள் இருக்கும் நேரம் முழுதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.