பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படமும் , இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படமும் ஒன்றாக திரையரங்கில் வெளியாகவுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை தியாகராஜா நகரில் உள்ள தமது இல்லத்தில் டி ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் கூறியதாவது “நாளை மறுநாள் ஈஸ்வரன் படம் வெளியாகவுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்த சிலர் சதி செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் விபிஎஃப், கேளிக்கை வரி, ஜிஎஸ்டிக்கு எதிராக தாம் போராடியதால் தன்னை பழிவாங்கும் நோக்கில் ஈஸ்வரன் திரைப்படத்தின் வெளியீட்டை தடுக்க முயற்சிக்கிறார்கள்” என்று கூறினார்.
#master #mastervijay #eswaran #tamilcinema #tamilmovie #vijay #simbu #trajendhar #tamilthisai