கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.
இந்நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாறிய கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் அங்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா காரணமாக மலேசியாவிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மலேஷியாவில் 3 மாதங்களுக்கு முன் 15 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக 1 லட்சத்து 38 ஆயிரமாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது தவிர நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் பிரதமர் முஹிதின் விடுத்த கோரிக்கையை ஏற்று மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அவசர நிலையை பிரகடனம் செய்தார்.