அரசியல்

மோடியால் தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல தமிழ் மக்களை கட்டுப்படுத்த முடியாது; ராகுல் காந்தி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவக்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருக்குறளை பிரதமர் மோடி பிரித்துக்கூட பார்த்திருக்க மாட்டார் என விமர்சித்தார்.

ALSO READ  கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் !

மேலும், தமிழ் மொழி தனக்கென தனி வரலாற்றைக் கொண்டுள்ள நிலையில், என்ன தைரியத்தில் ஒரே மொழி, ஒரே வரலாறு, என பிரதமர் மோடி பேசுகிறார் என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசை ரிமோட் கண்ரோல் மூலம் கட்டுப்படுத்துவதுபோல, தமிழக மக்களை கட்டுப்படுத்த முடியாது, என ராகுல் பேசினார்.

அதனையடுத்து ஆறு தொழிலதிபர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் மட்டுமே மோடி உழைப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தின் உணர்வுகளை புரித்து கொண்டால், மக்கள் இரண்டு மடங்காக அன்பு செலுத்துவார்கள் என்பதை தனது அனுபவத்தில் தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லியில் ஆட்சியை பிடிக்க தயாராகும் ஆம் ஆத்மி கட்சி…

Admin

‘டிக் டாக் புகழ்’ சோனாலி போகத் மாரடைப்பால் மரணம்..

Shanthi

தனித்து நின்று ஒரு இடத்திலாவது வெற்றி பெறமுடியுமா? காங்கிரஸ்க்கு எல்.முருகன் கேள்வி  

News Editor