இயக்குனர் ராகவன் மஞ்சப்பை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். விமல் நடிப்பில் வெளியான அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் ஆர்யா நடிப்பில் கடம்பன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த படத்தினை இயக்க தொடங்கியுள்ளார் ராகவன். அதற்காக நடிகர் பிரபு தேவாவிடம் கதை சொல்லி படத்தின் கதாநாயகனை ஒப்பந்தம் செய்துள்ளார். அதனையடுத்து பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கும் இப்படத்தினை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனையடுத்து ஒளிப்பதிவாளராக எஸ்.கே.செல்வகுமார் மற்றும் எடிட்டராக ஷான் லோகேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களை தொடர்ந்து பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு பாடல் எழுத்தவுள்ளார். இந்நிலையில் நேற்று படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் பெயர் இறுதி செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.