நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, தனஞ்செயன், சுனில் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்திரி மூமிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறர். புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
முதலில் புஷ்பா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தேதி ஒதுக்கப்படுவதில் சிக்கல் இருந்ததால் அப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகினார். அதனையடுத்து பல முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மலையாள நடிகர் பஹத் பாசில் புஷ்பா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதகாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் பஹத் பாசில் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் புஷ்பா என்பது குறிப்பிடத்தக்கது.
#tamilmovie #tamilcinema #cinema #pushpa #telugumovie #cinemanews #vijaysethupathi #Tamilthisai #fahadfazil #rashmikamanthanam