உலகம்

இந்தோனேஷியாவில் ரத்த வெள்ளம்….மக்கள் அதிர்ச்சி…!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜாவா:

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது.இங்குள்ள கிராமங்களில் நேற்று ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை சொல்போனில் படம் பிடித்து சமுக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில் பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது.அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது.

ALSO READ  இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்;ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு:

இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய தொழிற்சாலைகளால் நிறம் மாறி இருக்கின்றன. இந்த முறையும் அதேபோன்ற வெள்ளம் இந்த கிராமங்களை சூழ்ந்து இருக்கிறது. அடுத்து மழை பெய்யும் போது நிறம் மாறிவிடும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்தோனேஷியாவில் அடிக்கடி மழை பெய்துவது இயல்பான ஒன்று.சமீபத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 43 பேர் உயிரிழந்தனர். அதுபோல் இப்போதும் நடந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் சாயம் கலந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய வான்வெளியில் பறப்பதை தவிர்த்து மலேஷியா சென்ற இம்ரான் கான்

Admin

VAT வரியை மூன்று மடங்கு உயர்த்தும் சவூதி அரேபியா…

naveen santhakumar

டிஸ்னி நிறுவனம்…. ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்….

naveen santhakumar