இரண்டு நாள் பயணமாக இன்று மலேஷியாவுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய வான்வெளியை பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளார்.
சமிபத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டை தவறவிட்ட பின் அவர் மேற்கொள்ளும் மலேஷிய பயணம் இது. அங்கு Institute of Strategic and International Studies (ISIS) ல் உரையாற்ற உள்ளார்.
புல்வாமா தீவிரவாத தாக்குதல், காஷ்மீரில் அரசியல் சாசன பிரிவு 370 நீக்கம் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இரு நாட்டு உறவுகள் சீர் குலைந்துள்ளது. இந்நிலையில் தான் இந்திய வான்வெளி வழியாக பயணம் செய்ய வேண்டாம் என்ற இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தனது வான் வெளி வழியாக பயணிக்க பாகிஸ்தான் அரசு ஏற்கனவே பல தடவை தடை விதித்திருக்கிறது.
கடந்த அக்டோபரில் பிரதமர் மோடியின் தனி விமானம் பாகிஸ்தான் மீது பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. குறித்து சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பிடம் இந்தியா புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தான் மலேஷியாவிலிருந்து பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது. இந்நிலையில் இம்ரான் கானின் இந்த மலேஷிய பயணம் கவனம் பெறுகிறது.