கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய ‘நான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் கொலைகாரன். இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
அதனையடுத்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் படம் “கோடியில் ஒருவன்”. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மீக நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசமைக்கிறார்.
அண்மையில் கோடியில் ஒருவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. அதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலே முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்ட படக்குழு, தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் கட்ட தொடங்கியுள்ளது. முன்னரே கோடியில் ஒருவன் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது படக்குழு.