பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டத்தில் நடந்த அக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்.” ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளாக பார்க்க வேண்டும் எனவும், அவர்களை உணர்வுப்பூர்வமாகப் பார்க்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தமிழர்கள், இந்துக்கள், தேசியம் ஆகியவற்றிக்கு திமுகவினர் எதிரானவர்கள். பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதே தவிர அதிலுள்ள நிர்வாகிகளுடன் அல்ல. மேலும்
சசிகலா என்பவர் தனி மனிதர் எனவும், அவர் சிறை சென்று வெளியே வந்துள்ளார், தனி மனிதருக்கு உண்டான அனைத்து உரிமைகளும் சசிகலாவுக்கு உண்டு என்றார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று பாராட்டு தெரிவித்தார்.