மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அண்மையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கர்ணன் படம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில் “கர்ணன் படம் பார்த்தேன். வியந்துபோனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் மற்றும் அற்புதமான குழுவினர் அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன் என கூறியிருந்தார்.அதனையடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ‘கர்ணன்’ படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ‘கர்ணன் குரலை விரைவில் கேட்பீர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.