சினிமா

“நான் 9 வருடங்களாக வந்து செல்கிறேன்”; காஜல் அகர்வாலை கவர்ந்த பொள்ளாச்சி மெஸ்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையை இருந்து வருகிறார். இவர் தமிழில் மாரி, விஸ்வாசம், ஜில்லா போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். 

அதனை தொடர்ந்து கடந்த  அக்டோபர் 30 ஆம் தேதி காஜல் அகர்வால் கெளதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார், ஆகையால்  நடிப்பிற்கு ஒன்றரை மாதங்கள் பிரேக் விட்டிருந்தவர் காஜல். இதனையடுத்து தற்போது நடிகர் சீரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா  படப்பிடிப்பில் மீண்டும் இணைந்து  நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ்க்கு கணவருடன் விசிட் அடித்திருக்கும் காஜல் அகர்வால் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு மிகவும் பிடித்த பொள்ளாச்சி சாந்தி மெஸ்ஸில் சாந்தி அக்காவும், பாலகுமார் அண்ணனும் உணவோடு சேர்த்து அன்பையும் மிக அதிகமாக பரிமாறினார்கள். அதனால் தான் இந்த மெஸ் ஆரம்பித்த 27 ஆண்டுகளாக இங்கு உணவு சுவையாக இருக்கிறது. நான் இந்த சிறிய உணவகத்துக்கு 9 வருடங்களாக வந்து செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ALSO READ  ஆட்டம் டை ஆனால் இதுதான் நிலைமை…ஐசிசி புது முடிவு

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்தக்கட்ட சாதனைக்கு தயாராகும் நடிகர் பார்த்திபன்

Admin

பிக் பாஸ் “ஆரி” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு ..!

News Editor

துல்கர் சல்மான் படத்தின் டீசர் வெளியீடு!

News Editor