தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் இன்று அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,” திமுக அரசு, கொள்கை அரசாகவும், மக்களுக்கு சேவை செய்யும் அரசாகவும் அமையும் என்றும் கூறினார். அதிமுக ஆட்சியில் பொதுபிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என குற்றம்சாட்டிய ஸ்டாலின், பொதுமக்களுக்கு அச்சத்தை தர கூடிய அரசாக அதிமுக அரசு அமைந்துவிட்டதாகவும் விமர்சித்தார். மேலும் இன்னும் 3 மாதத்தில் தமிழ்நாட்டில் திமுக அரசு அமையும் என தெரிவித்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.