சினிமா

டப்பிங் பணியை தொடங்கிய அருண் விஜய் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகினார். தற்போது இவர் இயக்குனர் அறிவழகன் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘அருண் விஜய் 31’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத், டெல்லி என முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

ALSO READ  கர்ணன் படத்தை பாராட்டிய திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் !

‘குற்றம் 23’ படத்திற்குப் பிறகு இயக்குனர் அறிவழகன், அருண் விஜய்யுடன் இணைந்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அருண் விஜய் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரசிகர்கள் உடன் சிறப்பு காட்சியை கண்டுகளித்த ரஜினிக்குடும்பத்தினர்

Admin

உடலை வில்லாய் வளைத்து ஒர்க்அவுட் செய்யும் நடிகை குஷ்பு… வைரலாகும் பிக்ஸ்…! 

naveen santhakumar

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை – மருத்துவமனையில் அனுமதி

naveen santhakumar