சினிமா

மன்னிப்பு கேட்கும் செல்வராகவன்; விடாது விமர்சிக்கும் இணையதளவாசிகள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக வலம் வருகிறார் செல்வராகவன். இவர் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளி கிழமை அன்று “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரத்திற்கு ராம்சே என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சலசலப்பை ஏற்படுத்துள்ளது. பெரியாரை மறைமுகமாக தாக்கும் வகையில் இந்த பெயரை கதாபாத்திரத்திற்கு வைத்துள்ளதாக பெரியாரின் ஆதரவாளர்கள் படத்திற்கும் செல்வராகவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


அண்மையில் ஒரு நேர்காணலில் இது குறித்து செல்வராகவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையில் அவர் ‘ஆம்… பெரியாரைக் குறிப்பிட்டே அப்பெயர் வைக்கப்பட்டது’ என்கிற தொனியில் அவர் பதிலளிக்க, சமூக வலைதளங்களில் இவ்விவகாரம் சர்ச்சையாக வெடித்தது.

ALSO READ  “இந்தா வாங்கிக்க”…ATM-ல் புகுந்த திருடனை அடித்த தாத்தா

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,”நண்பர்களே! அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக்காட்டிய பின்புதான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இதனையும் வலைதள வாசிகள் வசைபாடி வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 கோடி பார்வையாளர்களை கடந்த “என்ஜாய் எஞ்சாமி” பாடல் ; 

News Editor

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு; ருத்ரன் படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor

‘இதை என்னால் தவிர்க்க முடியவில்லை’ ஸ்டாலின் குறித்து இயக்குநர் பாலா ட்வீட் !

News Editor