சினிமா

செல்வராகவன் குறித்து சாணிக் காயிதம் படத்தின் இயக்குநர் கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குநராக இருந்து வருகிறார். வித்தியாசமான கதைகளை இயக்கியதால் சினிமாத்துறையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது “சாணிக் காயிதம்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இவர் இப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  'ஆக்சிஜன் தட்டுப்பாடு' பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் !

“சாணிக் காயிதம்” படத்தை  இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இதில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சாணிக்காயிதம் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், செல்வராகவன் நடிப்பு குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், “எல்லா இயக்குநர்களும் சிறந்த நடிகர்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், செல்வராகவன் சார் ஆகச் சிறந்த நடிகர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  நான் அரசியலுக்கு கட்டாயம்  வருவேன் : நடிகர் பார்த்திபன் 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சல்மான் கான் வெளியிட்ட அறிக்கை…அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்!

News Editor

சவுதாம்ப்டன் வரை சென்ற வலிமை அப்டேட்…!

naveen santhakumar

தமிழ் ராக்கர்ஸ் தளம் நிரந்தரமாக மூடப்படுகிறது:

naveen santhakumar