அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஹிந்தி ரீமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம் வெற்றிப்பெற்றதையடுத்து மீண்டும் இந்த கூட்டணி தொடர்வதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதையடுத்து 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படத்தின் பெயரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதுமுதல் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள் வலிமை என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர். பின்பு படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே கொரோனா தொற்றால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடைப்பெறவில்லை.
பின்பு இந்த ஆண்டு இரண்டாம் அலைக்கு முன்பு வலிமை படப்பிடிப்பு சில நாட்கள் நடைப்பெற்றது. அப்போது அஜித்தின் புகைப்படங்கள் சில சமூகவலைதளங்களில் வைரலாகின.
இதனிடையே, கிட்டத்திட்ட ஓராண்டுகளாக படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாததால் விரக்தியான அஜித் ரசிகர்கள் யாரை கண்டாலும் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர்.
அந்த வகையில் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, இங்கிலாந்து வீரர் மொயின் அலி இடமும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டனர்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி தமிழகம் வந்த பிரதமர் மோடி வரை அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேக்காத ஆளே இல்லை.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்தார்.
பின்பு அஜித் தரப்பிலிருந்து கடிதம் ஒன்று வெளியானது . அதில், இனி வலிமை குறித்த தகவலை கோரிக்கையாக வைக்க வேண்டாம் எனவும் சரியான நேரத்தில் படக்குழுவே வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போதுஅஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் வேண்டுமென பதாகைகளை ஏந்தி கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தனர்.
மேலும், உடற்பயிற்சியில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வினிடமும் வலிமை அப்டேட் வேண்டுமென கேட்டுள்ளனர்.
இதேபோல, திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜாவும் இதுக்கு மேல யாரும் பொறுமையா இருக்க முடியாது #ValimaiUpdate எப்பதான் வரும் என்று ட்விட்டரில் கேட்டுள்ளார்.
அதேசமயம், வலிமை அப்டேட்டை இங்கிலாந்து வரை விடாமல் விரட்டி விரட்டி கேட்கும் அஜித் ரசிகர்களால் படக்குழுவினர் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர்.