தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1,500ரூபாய் நிதியுதவி, ஆண்டுக்கு ஆறு எரிவாயு சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு மானியம், கல்வி கடன் ரத்து போன்ற திட்டங்கள் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடியவை என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில் கொரோனா காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் தவித்த போது முதல்வர் பழனிச்சாமி பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினார் என தெரிவித்தார்.
The post முதல்வர் கொரோனா காலத்தில் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினார்; அன்புமணி ! appeared first on Tamil Thisai.