இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகி உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கலந்து கொள்வதால், அவருக்குப் பதிலாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.