சென்னை:-
மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலு. தி.மு.க., முன்னாள் வட்ட செயலரான இவர், தற்போது, மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.
மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சங்கரநேந்தரலயா மருத்துவமனையில் பணிபுரியும் கண் மருத்துவர் ஒருவரிடம், கட்டுமானம் பணி தொடர்பாக, மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்
இந்த தகவல், முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், பாலுவை, கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
சென்னை தென்மேற்கு மாவட்டம் மயிலை கிழக்கு பகுதி மாவட்ட தி.மு.க. பிரதிநிதி ஆர்.பாலு கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.