கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த கேரள மாணவி ஒருவருக்கு கொரோனா முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது. இவர் தான் இந்தியாவில் முதல் பெண் கொரோனா நோயாளி ஆவர்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் செமஸ்டர் விடுமுறையின்போது சீனாவில் இருந்து இந்தியா வந்தார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் தொற்றிலிருந்து குணமடைந்தார்.
திருச்சூரை சேர்ந்த இந்த மாணவிக்கு மீண்டும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகளற்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, இந்த மாணவி தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், இவரது மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சிக்காக புது டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒருபுறம் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் மகாராஷ்டிரா, கேரளா உள்ள மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதில் கேரளாவில் கொரோனா தொற்று பரவும் விதம் 9.14 சதவீதமாக உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.