தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஆகஸ்ட் 1 முதல் திட்டமிட்டபடி மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் என அவர் கூறியுள்ளார்.