திருவனந்தபுரம்:
பெண்களிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் வரதட்சணை கேட்டு பெண்களைக் கொடுமைப்படுத்துவது
சமீப காலமாக அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க பெண்களுக்கென்று தனி பாதுகாப்பு சட்டமும் இயற்றப்பட்டு வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பாக கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது, வரதட்சணை கேட்டு கொடுமை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏன வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
நேற்று சட்டசபையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், வரதட்சணை கேட்டு கொடுமை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். விழிப்புணர்வு பிரச்சாரம் மூலமாகப் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்..