சென்னை
ஒவ்வொரு பள்ளி மாணவர்கள் பெயரிலும் வங்கி கணக்கு துவக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தவிட்டுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. ஆதி திராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவை சார்பில் அந்தந்த பிரிவு மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.
இதுபோன்று தேசிய திறனாய்வு தேர்வு போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
.
இந்த உதவி தொகையை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் வழங்கும் வகையில் மாணவர்களின் பெயரில் வங்கி கணக்குகள் துவங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை என்ற நிபந்தனை இல்லாமல், இந்த வங்கி கணக்குகளை துவங்க வேண்டும் என்றும், தேசிய வங்கிகளில் மட்டுமே கணக்கு துவங்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.