தமிழகம்

நீட் தேர்வு: மேட்டூர் அருகே மாணவன் தற்கொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வகுப்பால் அதிகரிக்கும் மாணவர் மரணங்கள்” : ஆன்லைன் வகுப்பு புரியாத  மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் பி.வி.சி. பைப் கம்பெனி ஊழியராக வேலை செய்கிறார். இவரது இளையமகன் தனுஷ்(20). இவர் பிளஸ் டூ முடித்துவிட்டு ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதினார். இருமுறையும் தோல்வி அடைந்ததால் மூன்றாவது முறை படித்துக் கொண்டிருந்தார்.

மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தற்கொலை| Dinamalar

இந்நிலையில், இன்று மேட்டூர் அடுத்த மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் கல்லூரியில் நீட் தேர்வு நடக்க இருந்தது. இந்த தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தனுஷ் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

ALSO READ  மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் - முதல்வர் உத்தரவு

இந்த சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே நாளை சட்ட மன்றக்கூட்டத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

மாணவன் தற்கொலை தொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

ALSO READ  தற்போது பள்ளித் திறப்பு இல்லை….முதல்வர் அறிக்கை….

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி – மருத்துவமனை மூடல் …!

News Editor

உலக சுற்றுலா தினம்: கீழடி அகழாய்வு தளத்தில் குவிந்த மக்கள் …!

News Editor

சென்னையில் புயல்,மழை பாதிப்பு சேதங்களை ஆய்வு செய்கிறது மத்திய குழு :

naveen santhakumar