சென்னை:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் மீது பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மெட்ரிக் பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் சமூகநலத் துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
அரசு பள்ளிகளில் புகார் பெட்டியில் மாணவ, மாணவிகள் தெரிவிக்கும் புகார்களை மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது விசாரித்து உரிய தீர்வு காண வேண்டும் என்றும், இதற்கு ஏற்ப புகார் பெட்டிகளின் சாவி, மாவட்ட கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
அதுபோன்று மெட்ரிக் பள்ளிகளில் மாணவிகளுக்கு நேரும் பாலியல் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க புகார் பெட்டி அமைக்க மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் பெட்டி அமைத்து மெட்ரிக் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.