அலாஸ்கா:
இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி 17-வது முறையாக இணைந்து நடைபெறுகிறது. “எக்ஸ் யுத் அபியாஸ் 2021”-ல் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக 350 வீரர்களை கொண்ட இந்திய ராணுவ குழு அமெரிக்காவில் உள்ள எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சன், அலாஸ்கா கூட்டு பயிற்சி மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக 2021 அக்டோபர் 15 முதல் 29 வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இரு நாடுகளாலும் இணைந்து நடத்தப்படும் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ராணுவப் பயிற்சியாகும்.
இரு ராணுவங்களுக்கிடையே புரிதல், ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த பயிற்சி நோக்கமாக கொண்டுள்ளது. குளிர் பருவ நிலைகளில் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் குறித்த பகிர்தல்கள் மற்றும் ஒரு தரப்பின் சிறந்த செயல்முறைகளை மற்றொரு தரப்பு கற்று கொள்ளுதல் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்று இந்த கூட்டுப் பயிற்சியின் போது ராணுவ வீரர்களுக்கு மூத்த அதிகாரிகள் பயிற்சி அளிப்பர்.
கடினமான காலநிலைகளில் ராணுவ வீரர்கள் போர்சூழலை எவ்வாறு சமாளிக்க வேண்டும், குளிர் பிரதேசங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்று இருநாட்டு வீரர்களும் இந்த 14 நாள் பயிற்சியில் கற்றறிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.