சென்னை:-
இனி செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்றன. அதேபோல, கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதால், இனிமேல் செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடியாக எழுத்து தேர்வாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
அதன்படி இறுதியாண்டு, தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், இன்டெர்னல், ப்ராக்டிகல் உள்ளிட்ட தேர்வுகள் இனி நேரடியாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.