இந்தியா

குஷியோ குஷி… இன்று புத்தாண்டு பரிசாக ரூ.2000!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் (விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.06 லட்சம் கோடி வரை விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

10-வது தவணை நிதிப் பயன்களைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார். இதன் மூலம் ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட தொகை 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான பங்கு மானியமாக ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகையையும் பிரதமர் விடுவித்தார், இந்த உதவித் தொகை மூலம் 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைய உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், வேளாண் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Share
ALSO READ  500 ரூபாய்க்கு மனைவியை விற்ற கணவர்! அதிர்ச்சி சம்பவம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு கொடூர சம்பவம்:

naveen santhakumar

Kasyno I Książka Sportowa W Polsce ᐈ Oficjalna Stron

Shobika

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; புதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு..!

News Editor