தமிழகம்

வைகுண்ட ஏகாதசி.. பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

vaikundam
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30க்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு அதிகாலையில் சிறப்பு தரிசனம் செய்தார்.

ALSO READ  ஆரண்ய அறக்கட்டளை சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் !
Image

பழனி ஶ்ரீ இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, நாமக்கல் மலைக்கோட்டை அரங்கநாதர் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள், அரியலூர் கோதண்ட ராமசாமி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சேலம் கோட்டை பெருமாள், திருவள்ளுர் வீரராகவ பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருமயம் சத்தியமூர்த்திபெருமாள், மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரிப்பு!!!…

Admin

சென்னையில் வாகன கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உலோக சிற்பங்கள் தயார்…

Admin

ஜாவத் புயல் – துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

naveen santhakumar