சுற்றுலா தமிழகம்

பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை வண்டலூர் பூங்காவில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

வனத்துறை மூலம் தமிழகத்தில் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுகிறது. இந்நிலையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டு அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 33 சதவீதம் பசுமை போர்வை எனும் இலக்கை 10 ஆண்டுகளில் அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, இந்த ஆண்டு 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாற்றாங்கால்களின் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் தாம்பரத்தை அடுத்த வண்டலுார் உயிரியல் பூங்கா அருகேயுள்ள வனத்துறை இடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். மேலும் இவ்விழாவில் 500 மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடப்படுவது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  அபிராமி ராமநாதனுக்கு மத்தியஅரசு கவுரவம்…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தரமற்ற ஆவின் பால்…..வாடிக்கையாளர் அதிர்ச்சி:

naveen santhakumar

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் தந்தைக்காக எழுதிய கவிதை… 

naveen santhakumar

கொரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: முடிதிருத்த தொழிலாளியின் மகள் ஐநா-வின் நல்லெண்ணத் தூதராக நியமனம்..!!

naveen santhakumar