1927-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை, மைய மண்டபம் என்று மூன்று முக்கிய பகுதிகளாக நாடாளுமன்றம் பிரிக்கப்பட்டுள்ளது. இட நெருக்கடி காரணமாக புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்ட அரசு முடிவு செய்தது.
புதிய கட்டடத்திற்கான பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி. எனப்படும் நிறுவனம் முக்கோண வடிவிலான கட்டட மாதிரியை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய கட்டடத்தில் 900 மக்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தின் போது 1350 உறுப்பினர்கள் அமரும் வகையிலும் நாடாளுமன்ற மைய மண்டபம் வடிவமைக்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சவுத் பிளாக்கின் பின்புறம் பிரதமர் இல்லமும், நார்த் பிளாக் பின்புறம் குடியரசு துணைத்தலைவர் இல்லமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.