தீபிகா படுகோனேவுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது.வோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் தீபிகாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் மனச்சோர்வை எதிர்த்துப் போராடிய தீபிகா படுகோனே,லைவ் லவ் சிரிப்பு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். மனநல விழிப்புணர்வின் வக்கீலாக பணியாற்றியதற்காக உலக பொருளாதார மன்றத்தின் கிரிஸ்டல் விருது வழங்கும் விழாவில் தீபிகா படுகோனேக்கு விருது வழங்கப்பட்டது.
உலகப் பொருளாதார மாநாட்டில், மார்ட்டின் லூதர் கிங்கின் மேற்கோளுடன் தமது பேச்சை உரையைத் தொடங்கினார் தீபிகா, மும்பையின் பாலிவுட் நட்சத்திரங்களின் வண்ணமயமான வாழ்க்கைக்குப் பின்னால் சூழ்ந்துள்ள மன இருளை வெளிப்படுத்தி பலரை அதிரவைத்தார்.
மனநோய் குறித்த விழிப்புணர்வு தான் அதிலிருந்து மீள்வதற்கான வழி என்றார். மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரையாவது தம்மால் காப்பாற்ற முடியும் என்றுதான் இதனை வெளிப்படையாக விவாதிக்க தாம் முன்வந்ததாகவும் தீபிகா தெரிவித்தார்
உலகில் பல கோடி மக்கள் மனநல பாதிப்புக்கு ஆளாகி அவதியுற்று வருவதாக கூறினார். எனவே மனதளவில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தனிமையை தவிர்த்து சிரித்து பழக வேண்டும் என தெரிவித்தார். மன அழுத்தம் ஒரு கொடிய நோய் தான். இதற்கு சிகிச்சை உண்டு. இந்த கொடுமையை நானும் அனுபவித்து இருக்கிறேன் என கூறினார். லைவ்,லவ், லாப் அமைப்பை நான் ஆரம்பித்த காரணமே நம்மால் ஒரு உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் தான் என தெரிவித்தார்.