ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 500cc பைக்குகளின் தயாரிப்பு நிறுத்தம்
ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தனது 500cc மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பை அடுத்த ஆண்டு முதல் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் BS6 தரத்தில் வாகனங்களை
விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் ஆணையே.ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம்
ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தற்சமயம் 500cc -ல் தண்டர்பேர்டு, கிளாசிக், புல்லட் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.இந்நிலையில் இந்நிறுவனம் BS6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட 500cc பைக்குகள் இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்த போவது இல்லை.
ஏனெனில் இத்தகைய பைக்குகளை புதிய மாசு உமிழ்வு விதிக்கு உட்பட்ட முறையில் மாற்றுவது அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது. இது மட்டுமில்லாமல் 500cc பைக்குகள் விற்பனையிலும் பெரிய அளவில் லாபம் இல்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தற்போது 350cc பைக்குகள் தேவையின் காரணமாக BS6 க்கு அப்டேட் செய்யும் வேலையில் தீவிரமாக பணியாற்றி வருகிறதாம்.