புதுடெல்லி:-
பிரதமர் மோடி நேற்று இரவு ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என கூறினார். இது தொடர்பாக இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
கொரோனாவுக்காக பிரதமர் மோடி அறிவித்துள்ள பொருளாதார நிதித் திட்டமான 20 லட்சம் கோடி ரூபாய், பாகிஸ்தானின் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமானது என்பது தெரிய வந்துள்ளது.
உலக வங்கியின் புள்ளிவிவரங்களின் படி கொரோனா எதிரொலியாக பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்து 21.58 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பாகிஸ்தான் மட்டுமின்றி வியட்நாம், போர்ச்சுக்கல், கிரீஸ், நியூசிலாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விடவும் பிரதமர் அறிவித்துள்ள கொரோனா பொருளாதார நிதியுதவி பெரிதாகும். ஜப்பான் ஜிடிபியில் இது 21% ஆகும். அமெரிக்கவின் ஜிடிபியில் இது 13%. இது இங்கே ஜிடிபியில் 10% மட்டுமல்லாது பம்பாய் பங்குச் சந்தையின் மொத்த பங்குகளின் மதிப்பில் இது கிட்டத்தட்ட 16% ஆகும்.
இதனிடையே வருமான வரி (Income Tax) போன்ற தனிநபர் வரி (Individual Tax) ரத்து செய்யப்படலாம் என்ற செய்திகள் உலாவருகிறது.