நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் பட பிடிப்புகள் இல்லாததால் சமூக வலைதங்ககளில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் இன்ஸ்டா லைவ்வில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா??? என்ற ரசிகரின் கேள்விக்கு ” சமந்தா பதிலளித்தார்.
அதில், “நான் கடந்த 2017ம் ஆண்டில் இருந்தே கர்ப்பமாக உள்ளேன். ஆனால், இந்த குழந்தை தான் வெளியே வர மறுக்கிறது” என்று தொடர்ந்து தன்னை பற்றி வரும் கர்ப்பம் குறித்த வதந்திக்கு நாசுக்காக பதில் அளித்தார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான “ஏ மாய சேஸாவே” ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர்கள் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
அதே போல் சமந்தாவும் மொட்டை மாடியில் கார்டனிங் செய்து கீரை ,கேரட், முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை அறுவடை செய்து வருகிறார்.