நடிகர் விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.நடிகர் விஜய் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிபில் இருக்கும் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். தங்களுடன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்றும் அவரிடம் விசாரணை நடக்கிறது.
விஜய் வீடடில் நடக்கும் இந்த ரெய்டிற்கு அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் டிவிட்டரில் நாங்கள் விஜயுடன் உடன் நிற்கிறோம் என்று #WeStandWithVIJAY என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டேக் விஜய்க்கு ஆதரவாக பலரும் டிவிட் செய்து வருகிறார்கள். வெறித்தனம், வெறித்தனம் என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. அண்ணா நாங்க உங்க கூட இருக்கும் என்று ஆறுதலையும் ரசிகர்களை தெரிவித்துள்ளனர். முடிந்த வரை இந்த ஹேஷ்டேக்கை பகிருங்கள்… புள்ளிங்கோ என்றும் பதிவுகள் அதிகமாக வர ஆரம்பித்துள்ளன.
இதனால் தற்போது விஜய் வீட்டின் முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.