இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் தனது வித்தியாசமான நடிப்பு திறமையால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி கோவையை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து கார்த்தி-ரஞ்சனி தம்பதியினருக்கு உமையாள் என்ற பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் இந்த தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், இந்தக் குழந்தைக்கு ‘கந்தன்’ என பெயரிட்டுள்ளதாக கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதில், “கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக ‘கந்தன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா” என குறிப்பிட்டுள்ளார்.
#karthi #karthiranjini #actorkarthi #tamilcinema #tamilthisai #cinema #cinematrending #cineupdate #karthison #kanthan #tamilThisai