மும்பை:-
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சர்ச்சைகளுக்கு சற்றும் பஞ்சமில்லாத அர்னாப் கோஸ்வாமி. நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை பேச விடாமல் செய்வது, கத்துவது, அதட்டுவது என்று களேபரங்கள் செய்பவர் என்று அர்னாப் கோஸ்வாமியை குறிப்பிடுவார்கள்.
அங்கே அர்னாப் கோஸ்வாமி என்றால் இங்கே நடிகை கஸ்தூரி.
இந்நிலையில் கஸ்தூரி ரிப் பப்ளிக் டிவியில் ஹிந்தி சினிமா துறையில் நடைபெற்று வரும் நேபோடிச கலாச்சாரம் (Nepotism Culture) குறித்து நேரலையில் விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கஸ்தூரியை அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி பேசவே விடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நடிகை கஸ்தூரி தனது உணவை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இவரது தைரியத்தை பாராட்டுவதாகவும், நேரலையில் இப்படியா செய்வது என்று திட்டியும் பதிவிட்டனர்.
இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், அர்னாப்பின் ஹைப்பர் மொடை 60 நிமிடங்கள் பார்த்தேன். அவர் எப்படியும் என்னை பேச அனுமதிக்க மாட்டார். அதனால் நான் உணவை சாப்பிட ஆரம்பித்தேன். ஆனால் ஸ்கைப்பை சைன் அவுட் செய்ய மறந்துவிட்டேன். இந்த குழப்பத்திற்கு அனைவரும் மன்னிக்கவும். இதில் எந்த குற்றமும், அவமரியாதையும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சிலர் அந்த வீடியோவில் “நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு தான் பொங்கல் சாப்பிட்டேன் எனெனில் சுற்றுப்புற சத்தத்தைப் பொருட்படுத்தாமல் தூங்க இது உதவுகிறது பதில் அளித்துள்ளார்.