கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைவரது வேலைகளும் முடங்கி கிடக்கிறது.சாதாரண மனிதர்களுக்கே இது எரிச்சலை ஏற்படுத்தியது.இதில் நடிகர்,நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம்.
எந்த ஒரு திரையுலக நட்சத்திரமும், தாங்கள் விரும்பியபடி தங்கள் விடுமுறையை வெளிநாடுகளில் சென்று உற்சாகமாக கழிக்க முடியவில்லை. அந்த வருத்தம் நடிகை பாவனாவுக்கு ரொம்பவே இருக்கிறதாம். வெளிநாடுகளில் அவருக்கு ரொம்பவே பிடித்த நகரம் என்றால் நியூயார்க் தான்.
தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில்,நடிகை பாவனா ஏற்கனவே தான் நியூயார்க் நகரில் தனது தோழியும் நடிகையுமான ரம்யா நம்பீசனுடன் இணைந்து சுற்றியபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாவனா.
மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய இதயம் இந்த நேரத்தில் சொல்வதை நான் பின்பற்றினால், அது என்னை நியூயார்க் நகரத்திற்கு தான் அழைத்துச் செல்லும்.. நியூயார்க்கையும் ரம்யா நம்பீசனையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்” என்று தனது ஏக்கத்தை பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.